'மேட்டுப்பாளையம் அருகே கல்குவாரிக்கு அனுமதிக்க கூடாது..!' - நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எச்சரிக்கை

காரமடை நகராட்சி பகுதியில் குடியிருப்பு அருகே புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என நகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க, திமுக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, குவாரிக்கு அனுமதி வழங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் வார்டு கவுன்சிலர்கள் 27 பேர் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் 21 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.



அப்போது, காரமடை நகராட்சி எத்தப்பன்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்க நடத்த கருத்துகேற்பு கூட்டத்தினை காரமடை நகராட்சி பகுதியில் வைக்காமல் அருகில் உள்ள கிராமமான மருதூர் கிராமத்தில் வைத்து நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் அதிமுக, திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகவும், பொதுமக்கள் ஏற்கனவே வாழ்ந்து வரும் எத்தப்பன்நகர் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டால் அங்கு மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். குவாரியில் வெடி வைத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுவதுடன் பொதுமக்களின் தலையில்தான் அந்த கல் விழும் என்ற நிலையில் ஏன் காரமடை நகராட்சி நிர்வாகம் அதனை அனுமதிக்கிறது?



பொதுமக்களின் நலன் கருதி சர்ச்சைக்குரிய கல்குவாரியை அங்கு அமைக்க நகராட்சி தரப்பில் எந்த அனுமதியும் வழங்க கூடாது என பா.ஜ.க, அதிமுக மற்றும் சில திமுக கவுன்சிலர்கள் தங்களது ஆட்சேபனைகளை காரசாரமாக தெரிவித்தனர். ஆனால், இதனைக் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் கண்டுகொள்ளாமல் கடைசி வரை மெளனம் காத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த கல்குவாரி எதிர்ப்பு கவுன்சிலர்கள், குவாரி அமைக்க நகராட்சி அனுமதி கொடுத்தால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...