உதகையில் தனியார் விடுதியில் விபச்சாரம் - புரோக்கர் உட்பட மூவர் கைது!

உதகை அருகே தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், புரோக்கர் உட்பட மூவரை கைது செய்து விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் தங்கும் விடுதியில் சட்டவிரோதமாக பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் தங்களிடம் அழகிகள் உள்ளதாகவும், விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் லாட்ஜ்க்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த நான்கு அறைகளில் 2 அறையில் இரண்டு அழகிகள் அரை குறை ஆடையுடன் இருந்ததை விவசாயி பார்த்துள்ளார். பின்னர், தன்னிடம் போதிய பணம் இல்லை, அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அவர் உதகை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கரான தென்காசியை சேர்ந்த சையது அலி (43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்தனர்.

உதகை நகர பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பல் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...