கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜகவினர் கைது

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆர்.எஸ் புரம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் வலியுறுத்தினார். மேலும் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைவழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாமல் காலதாமதம் செய்வது வெட்கக்கேடு எனவும், தமிழக அரசியலில் உள்ளவர்கள் ஆவியை பார்த்து பயப்படுவது போல காவியை பார்த்து பயப்படுவதாகவும் கூறிய அவர், வருங்காலங்களில் தமிழகத்தில் காவி கொடி பறந்தேதீருமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...