பல்லடம் அருகே சொத்துக்காக அண்ணனை கடத்தி மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூர தங்கை - இருவர் கைது!

பல்லடம் அருகே சொத்துக்காக அண்ணனை தங்கையே கடத்தி கட்டிவைத்து அடித்து சொத்து, பணம், நகைகளை பறித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து, மனநல காப்பகத்தில் சேர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி, மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொன்னுசாமி இறந்து விட்ட நிலையில் அவரது சொத்துக்கள் மகன் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. சிவக்குமாருக்கு பெருமாநல்லூரிலும், கோவை சுல்தான்பேட்டையிலும் மூன்றரை ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது.

சிவக்குமாருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர்களின் சொத்துக்களை அம்பிகா குடும்பத்தினர் தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி அடிக்கடி சிவக்குமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி சேடபாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வடிவேல் வீட்டுக்கு சிவக்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு தனது கணவர் மற்றும் மகனுடன் சென்ற தங்கை அம்பிகா உள்ளிட்டோர், சிவக்குமாரை வாயை மூடி கயிற்றால் கட்டி காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரை அறிவொளி நகரில் உள்ள அம்பிகாவுக்கு சொந்தமான வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்ததாக கூறப்படுகிறது.

அடி தாங்க முடியாமல் சிவக்குமார், என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து சிவக்குமாரை கீழே இறக்கிய அம்பிகா, வேலுசாமி, கோகுல் ஆகியோர் 21 ஸ்டாம்ப் பேப்பரில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, சிவக்குமார் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரம், செயின், ஒன்றரை லட்சம் பணம் மற்றும் தெக்கலூரில் உள்ள வீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பறித்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு கார்களில் சிவக்குமாரை ஏற்றி கொண்டு பெங்களூர் சென்ற அவர்கள், செல்லும் வழியில் சிவக்குமாரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து பார்த்த போது சிவக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்துள்ளார்.

இதன் பின்னர், அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் சோமனூர் சங்கீதா தியேட்டரின் உரிமையாளரான அவரது மாமா ராமமூர்த்தி ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து, அங்கு சென்ற அவர்கள் சிவக்குமாரை மீட்டு பல்லடம் அழைத்து வந்துள்ளனர்.



இந்நிலையில், தன்னை கடத்தி தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற தங்கை அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், கோகுல் மற்றும் வேலுச்சாமியை கைது செய்தனர். இதனையடுத்து கோகுலை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்த போலீசார், உடல்நல குறைவு காரணமாக வேலுச்சாமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிவக்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள அம்பிகா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

சொத்துக்காக தங்கையே அண்ணனை கடத்தி மனநல காப்பகத்தில் சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...