தாராபுரத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நகர அரிமா அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது ஜெம் மருத்துவமனை சார்பில் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு குழாய், குடல் இறக்கம், பித்தப்பை, கற்கள், குடல் புண், மலக்குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.



இந்த முகாமில் 320 பேர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பரிசோதனை முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அப்போது தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் கந்தசாமி மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார் சிவக்குமார், ஆயுமுத்து, ரத்தினம் சாரதா, சண்முகவேல், கோபாலகிருஷ்ணன், வட்டார தலைவர் தங்கவேல், ஆலோசனை குழு உறுப்பினர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...