தாராபுரத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நகர அரிமா அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது ஜெம் மருத்துவமனை சார்பில் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு குழாய், குடல் இறக்கம், பித்தப்பை, கற்கள், குடல் புண், மலக்குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.



இந்த முகாமில் 320 பேர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பரிசோதனை முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அப்போது தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் கந்தசாமி மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார் சிவக்குமார், ஆயுமுத்து, ரத்தினம் சாரதா, சண்முகவேல், கோபாலகிருஷ்ணன், வட்டார தலைவர் தங்கவேல், ஆலோசனை குழு உறுப்பினர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...