தாராபுரத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச உடல் பரிசோதனை முகாம் உடுமலை சாலையில் உள்ள அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நகர அரிமா அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது ஜெம் மருத்துவமனை சார்பில் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு குழாய், குடல் இறக்கம், பித்தப்பை, கற்கள், குடல் புண், மலக்குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.



இந்த முகாமில் 320 பேர் கலந்து கொண்டனர். இதில் அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பரிசோதனை முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அப்போது தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் கந்தசாமி மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார் சிவக்குமார், ஆயுமுத்து, ரத்தினம் சாரதா, சண்முகவேல், கோபாலகிருஷ்ணன், வட்டார தலைவர் தங்கவேல், ஆலோசனை குழு உறுப்பினர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...