திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்தில் அன்னதான திட்டம் - அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்

உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி என்ற தொண்டு அமைப்பின் சார்பில் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், கல்லாபுரம், அமராவதி நகர், ஆண்டிகவுண்டனூர், தளி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி சார்பாக அன்னமித்ரா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ் வருடம் 365 நாட்களும் உணவு இல்லாதவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழாவில் ரோட்டரி உடுமலைபேட்டை கேலக்ஸி தலைவர் பொன்ராஜ், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் என் ஆர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...