திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்தில் அன்னதான திட்டம் - அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்

உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி என்ற தொண்டு அமைப்பின் சார்பில் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், கல்லாபுரம், அமராவதி நகர், ஆண்டிகவுண்டனூர், தளி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி சார்பாக அன்னமித்ரா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ் வருடம் 365 நாட்களும் உணவு இல்லாதவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழாவில் ரோட்டரி உடுமலைபேட்டை கேலக்ஸி தலைவர் பொன்ராஜ், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் என் ஆர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...