திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்தில் அன்னதான திட்டம் - அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்

உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி என்ற தொண்டு அமைப்பின் சார்பில் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், கல்லாபுரம், அமராவதி நகர், ஆண்டிகவுண்டனூர், தளி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி சார்பாக அன்னமித்ரா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ் வருடம் 365 நாட்களும் உணவு இல்லாதவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழாவில் ரோட்டரி உடுமலைபேட்டை கேலக்ஸி தலைவர் பொன்ராஜ், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் என் ஆர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...