திருப்பூர் தாராபுரத்தில் ‘வருமுன் காப்போம்’ இலவச மருத்துவ முகாம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பூர் அடுத்த செங்கோடம்பாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.



பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1996-ம் ஆண்டு 4-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.



மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப் புறங்களுக்கும் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



இதைத்தொடர்ந்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், செங்கோடம்பாளையம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...