சமத்துவ கழக இளைஞர் அணி சார்பில் ரயில்நிலையம் முற்றுகை போராட்டம்


பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடக்கோரி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய சமத்துவகழக இளைஞர் அணியினர் 68 பேர் கைது

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்றைக்கு கொண்டாடப்படும் சூழ்நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து சாதியற்ற சமத்துவ சமூகம்  இந்தியாவில் உருவாக்கிட காதல் திருமணத்தை பாதுகாக்க சட்டம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ கழக இளைஞர் அணியின் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடவும், தமிழகத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலைகளை தடுத்திடக்கோரியும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடக்கோரியும் வலியுறுத்தி ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 குழந்தைகள் உட்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. காதல் திருமணம் புரிந்து கொண்ட புது ஜோடிகள் மற்றும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டி குடும்பத்தோடு கொண்டாடினார்கள். காதல் திருமணங்கள் தான் சாதி, மதத்தை அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும் என்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...