உடுமலையில் நடுகல் வழிபாடு - வரலாற்று ஆய்வாளர்கள் களஆய்வு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பாரம்பரியமான கோயில்களில் உள்ள நடுகல்களை வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரிய நடுகல் வழிபாட தொடர்பான சின்னங்களை வரலாற்று ஆய்வுத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மடத்துக்குளம் தாலுக்கா நரசிங்கபுரத்திலிருந்து கருப்புசாமி புதூருக்கு செல்லும் சாலையில், பாரம்பரியமிக்க கோயில்களில் நடுகற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து, வரலாற்று ஆய்வாளர்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கோயிலின் கட்டிடத்திற்குள் இருக்கும் நடுகற்களை கன்னிமார் சாமி என்றும், அதற்கு அருகில் இலந்தை மரத்தின் அடியில் இருக்கும் நடுகற்களை வீரமாத்தி அம்மன் என்றும், எதிரில் இருக்கும் பெரிய அளவிலான சுமார் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட நினைவு நடுக்கற்களை மாலையம்மன் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவர் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியர் ராபின் கேட்டபோது,

நடுகல் வழிபாடு என்பது கொங்கு நாட்டில் பண்டைய மக்கள், இனக்குழுக்களாக வாழ்ந்து கால்நடைகளை சொத்துக்களாகவே வளர்த்து வந்துள்ளனர். இன குழுக்களின் பிரிவுகளிடையே மற்றொரு குழுவினர் கால்நடைகளை கவர்ந்து செல்வது, அவ்வாறு கவர்ந்து செல்லப்பட்ட கால்நடைகளை வீரம் செறிந்தவர்கள் மீட்டு வருவார்கள்.

இந்த கால்நடை மீட்பு போர்க்களத்தில் இயற்கைக்கும் வீரர்களுக்கும் நடுகற்கள் வைக்கப்படும் நடைமுறை இருந்தது. இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல்நட்டு வழிபடுவதும் பண்டைய தமிழ் மரபு, என்றனர்.

இதற்கிடையில், உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பாரம்பரியமான வரலாற்று பொக்கிஷங்கள் சிதலமடைந்து காணப்படுவதால், தொல்லியல் துறையினர், அவை குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...