'ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' - தாராபுரம் கோட்ட மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடு, கைத்தறி, பவர் லூம், குடிசை மின் இணைப்புகளின், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயமாக இணைக்க வேண்டும்.

தாராபுரம் கோட்டத்தில் 20 மின்சார வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண் இணைக்கப்படாத மின் இணைப்புகளுக்கு மின் நுகர்வோருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆதார் எண்ணை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதே சமயம் அனைத்து மின்நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண் மற்ற விவரங்களை பணியாளர்களிடம் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...