'ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' - தாராபுரம் கோட்ட மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடு, கைத்தறி, பவர் லூம், குடிசை மின் இணைப்புகளின், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயமாக இணைக்க வேண்டும்.

தாராபுரம் கோட்டத்தில் 20 மின்சார வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண் இணைக்கப்படாத மின் இணைப்புகளுக்கு மின் நுகர்வோருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆதார் எண்ணை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதே சமயம் அனைத்து மின்நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண் மற்ற விவரங்களை பணியாளர்களிடம் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...