கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு - சாலையைக் கடக்க முயன்றபோது விபத்து

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதால், சம்பவ இடத்தில் பலியானார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி கமலவேணி இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேகமாக வந்த கார் கமலவேணி மீது மோதியது. பலத்த காயமடைந்த கமலவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கமலவேணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...