கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு - சாலையைக் கடக்க முயன்றபோது விபத்து

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதால், சம்பவ இடத்தில் பலியானார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி கமலவேணி இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேகமாக வந்த கார் கமலவேணி மீது மோதியது. பலத்த காயமடைந்த கமலவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கமலவேணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...