குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்குக் கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கத்தி குத்து. குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை.



நீலகிரி: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு உதவி பெற்று வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவரைக் குத்தியுள்ளார்.



இதில் காயமடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவருக்கு முதுகு பகுதியில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூரில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...