குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்குக் கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கத்தி குத்து. குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை.



நீலகிரி: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு உதவி பெற்று வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவரைக் குத்தியுள்ளார்.



இதில் காயமடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவருக்கு முதுகு பகுதியில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூரில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...