குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்குக் கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கத்தி குத்து. குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை.



நீலகிரி: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு உதவி பெற்று வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவரைக் குத்தியுள்ளார்.



இதில் காயமடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவருக்கு முதுகு பகுதியில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூரில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...