'தலைக்கவசம் இனி கட்டாயம்..!' - 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு!

கோவை மாநகரில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தும் வகையில், 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வலியுறுத்தி கோவையில் 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனை கடுமையாக்கும் வகையில் இன்று ஒரு நாள் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, ரூ.1000 அபராதம் மற்றும் 3 மணி நேரம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என கோவை மாநகர போலீசார் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் கோவை மாநகரம் முழுவதும் காளப்பட்டி சாலை, கொடிசியா, நவ இந்தியா சந்திப்பு, ராமகிருஷ்ணா கல்லூரி, சக்தி ரோடு, துடியலூர் சாலை, காந்திபுரம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, பேரூர் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, திவான் பகதூர் சாலை ஆகிய 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், நவ இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைப் பிடித்து அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 3 மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பும் எடுக்கப்பட்டது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...