கிணத்துக்கடவு அருகே ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகத்திற்காக சாலையோரத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், டியூப் லைட்டுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன்மீது தாக்குதல் நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பெரியார் நகர் பகுதி சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) சுலைமான்(வயது 21) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...