கிணத்துக்கடவு அருகே ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகத்திற்காக சாலையோரத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், டியூப் லைட்டுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன்மீது தாக்குதல் நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பெரியார் நகர் பகுதி சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) சுலைமான்(வயது 21) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...