கோவையில் சிறுமி பலாத்காரம் - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

கோவையில் 13 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது.


கோவை: கோவையில் வளர்ப்பு மகளை மிரட்டி பாலத்காரம் செய்த தந்தையைப் புகாரின் பேரில் போலீசார் போக்சா சட்டத்தில் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 35 வயது நபரை இரண்டாவது திருமணம் செய்தார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் மாணவியின் வளர்ப்பு தந்தை மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மாணவி தனது தாயிடம் சொல்லாமல் இருந்தார். இதனை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவியை அவரது தாய் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 2மாத கர்ப்பமாக இருப்பதாக, அவரது தாயிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார். அப்போது மாணவி வளர்ப்பு தந்தை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாகவும், அவர் தான் கர்ப்பத்துக்குக் காரணம் என தெரிவித்தார். இது குறித்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...