இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

கோவை இடிகரை பேரூராட்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


கோவை: இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

கோவை இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லா பேரூராட்சியாக இடிகரை பேரூராட்சியை மாற்றிக் காட்ட வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து அனைவரும் கைகளை உயர்த்தி போதைப் பொருள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெகநாதன், செயல் அலுவலர், பேரூராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...