இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

கோவை இடிகரை பேரூராட்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


கோவை: இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

கோவை இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லா பேரூராட்சியாக இடிகரை பேரூராட்சியை மாற்றிக் காட்ட வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து அனைவரும் கைகளை உயர்த்தி போதைப் பொருள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெகநாதன், செயல் அலுவலர், பேரூராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...