இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

கோவை இடிகரை பேரூராட்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.


கோவை: இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

கோவை இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லா பேரூராட்சியாக இடிகரை பேரூராட்சியை மாற்றிக் காட்ட வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து அனைவரும் கைகளை உயர்த்தி போதைப் பொருள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெகநாதன், செயல் அலுவலர், பேரூராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...