பள்ளேபாளையம் கிராம சபை கூட்டத்தில் அதிகாரியிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி

மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்கு முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யாத அதிகாரியை கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சூழ்ந்து சராமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு.



கோவை: குடியரசு தினத்தை ஒட்டி மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மக்களுக்கு மூளையூர் என்ற இடத்தில் உள்ள பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சம்பரவள்ளி கோவில் மேடு நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை, குடிநீர் வழங்கல் அதிகாரிகள் முறையாக விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

அத்துடன் சம்பரவள்ளி கோவில் மேடு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைத் திருட்டுத்தனமாகத் தோட்டங்களுக்கு வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.



இந்நிலையில் இன்று பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சிவக்குமார் தலைமையில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த குடிநீர் வழங்கல் அதிகாரி கலந்துக் கொண்டார்.



அவரிடம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் அதிகாரிக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் மௌனமாக இருந்தார்.

எங்கள் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீர் எங்கே? அதனை யாருக்கு கொடுக்கிறீர்கள் என அதிகாரியைச் சூழ்ந்த பொதுமக்கள் குடிநீர் முறையாக வராமல் இருப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டும் என வலியுறுத்தினர்.



வசமாக மாட்டிய அதிகாரி ஒரு கட்டத்தில் எங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. உயர் மின் அழுத்தம் வருவதால் தான் அடிக்கடி நீரை உரிஞ்சும் மோட்டார் பழுதாகி நின்று விடுகிறது.

ஆகவே இந்த பிரச்சினையை மின்சாரத்துறையால் தான் என மழுப்பலாகப் பேசியதுடன், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்து அவர்கள் பிரச்னையைச் சரி செய்து தருவதாகக் கூறியுள்ளனர். எனவே அதற்குப் பின் குடிநீர் பிரச்சினை சீராகும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

கடந்த வாரம் சம்பரவள்ளி கோவில் மேடு நீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தண்ணீரை திருடி வந்த நிலையில் அதனை ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரத்துடன் கூறியதால், இரண்டு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதற்குப் பின் தான் அடிக்கடி இந்த உயர்மின் பிரச்னையைக் கூறி தண்ணீர் விநியோகம் சரிவர வருவதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள், குற்றத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்ததால் அந்த ஊராட்சி மக்களைப் பழிவாங்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...