திருப்பூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் பக்தியுடன் தரிசனம்!

திருப்பூர் கூலிப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் கூலிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட கூலிப்பாளையத்தில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் மகா கணபதி ஹோமத்துடன் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

இதை அடுத்து விநாயகர் வழிபாடு, குபேர லட்சுமி நவகிரக ஹோமம், எந்திர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று வேத பாராயணத்துடன் தொடங்கியது.



இதனை தொடர்ந்து மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...