கோவையில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞருக்கு 294 நாட்கள் சிறை

கோவை வடவள்ளியில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞரை 294 நாட்கள் சிறையில் அடைக்க பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவு.


கோவை: கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 'சுள்ளான்' என்ற வாலிபர் நன்னடத்தை பிணையப் பத்திரத்தை மீறியதால்,294 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தீபக் என்ற சுள்ளான் (21) என்பவரை போலீசார் பலமுறை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபக் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். மேலும் இனி இம்மாதிரியான தவறுகளைச் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தீபக் நன்னடத்தை பிணையப் பத்திர உத்தரவுகளை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அவரை வடவள்ளி போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிணையப் பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக,செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 294 நாட்கள் தீபக்கைச் சிறையில் வைக்கப் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்தியச் சிறையில் உள்ள தீபத்துக்கு வழங்கப்பட்டது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...