'உங்களுக்கு 3 நாட்கள்தான் அவகாசம்..!' - சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை நகரில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை 3 நாட்களுக்கு அகற்ற வேண்டும் என்று சாலையோர கடை உரிமையாளர்களுக்கு மாநகர போலீசார் கெடு விதித்துள்ளனர்.


கோவை: சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 3 நாட்களுக்குள் அகற்றும்படி சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாநகரப் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதை அடுத்து மாநகரில் உள்ள முக்கிய சாலைகளை ஆய்வு செய்த போது, பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடைகள் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளதாலும், வரும் மூன்று நாட்களுக்குள் சாலை ஓரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அகற்ற தவறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் கடை உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...