'உங்களுக்கு 3 நாட்கள்தான் அவகாசம்..!' - சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை நகரில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை 3 நாட்களுக்கு அகற்ற வேண்டும் என்று சாலையோர கடை உரிமையாளர்களுக்கு மாநகர போலீசார் கெடு விதித்துள்ளனர்.


கோவை: சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 3 நாட்களுக்குள் அகற்றும்படி சாலையோர கடை உரிமையாளர்களுக்கு கோவை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாநகரப் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதை அடுத்து மாநகரில் உள்ள முக்கிய சாலைகளை ஆய்வு செய்த போது, பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடைகள் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளதாலும், வரும் மூன்று நாட்களுக்குள் சாலை ஓரங்களில் உள்ள தேநீர் மற்றும் பிற கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அகற்ற தவறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் கடை உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...