மேட்டுப்பாளையத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துரை காவல்நிலைய போலீசார் ராஜேஷ், ஸ்டாலின் என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இதனைக் கண்டித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...