கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி - மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்றவரை, சிறுத்தை தாக்கியதில் படுகாயம். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.



நீலகிரி: கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவருக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் பன்னீர் செல்வம் (48) என்பவர் இன்று காலை அவரது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று பன்னீர் செல்வத்தை தாக்கியது. அவரின் அலரல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சிறுத்தையை விரட்டினர்.



படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...