தாராபுரத்தில் அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சாரம்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மற்றும் அமமுக சார்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான சண்முகவேல் ஆலோசனையின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை, தாராபுரம் நகரச் செயலாளர் சிவராம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமமுக செயலாளர் மூலனூர் வேலுமணி, தாராபுரம் அண்ணாதுரை, குண்டடம் லீலாவதி, குண்டடம் வடக்கு ராஜகோபால், வெள்ளகோவில் சண்முகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...