உடுமலையில் அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு.


திருப்பூர்: உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை மண்டலச் செயலாளருமான சண்முகவேலு பேசியதாவது,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலையில் பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தற்சமயம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் இருப்பது சிறந்தது. பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது பழனி மாவட்டம் ஒன்று உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் பழனி பகுதியில் மடத்துக்குளத்தை இணைக்க மாட்டோம். அமமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...