உடுமலையில் அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு.


திருப்பூர்: உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை மண்டலச் செயலாளருமான சண்முகவேலு பேசியதாவது,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலையில் பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தற்சமயம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் இருப்பது சிறந்தது. பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது பழனி மாவட்டம் ஒன்று உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் பழனி பகுதியில் மடத்துக்குளத்தை இணைக்க மாட்டோம். அமமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...