உடுமலையில் அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு.


திருப்பூர்: உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை மண்டலச் செயலாளருமான சண்முகவேலு பேசியதாவது,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலையில் பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தற்சமயம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் இருப்பது சிறந்தது. பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது பழனி மாவட்டம் ஒன்று உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் பழனி பகுதியில் மடத்துக்குளத்தை இணைக்க மாட்டோம். அமமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...