நீலகிரி மலை ரயிலை மறித்த காட்டுயானைக் கூட்டம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை திடீரென காட்டுயானைக் கூட்டம் ஒன்று வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைக்கூட்டம், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைப்பாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை காட்டுயானைக் கூட்டம் திடீரென வழிமறித்தது. இதனால், மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.



சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர். மலை ரயிலை காட்டுயானை வழிமறித்த சம்பவத்தால், பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...