கோவையில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். 240 நாட்கள் பணிபுரிந்தாலும் பணி நிரந்தரம், என்டிசி ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...