குடியரசு விழா முன்னெச்சரிக்கை - கோவை நகரில் 1500 போலீசார் குவிப்பு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரம் முமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகரம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடு மற்றும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் அவர் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் கோவை ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

முக்கிய குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், மாநகரம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் வந்து தங்கும் நபர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரிக்குமாறு விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான தகவல்களை பெறாமல் தங்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...