குடியரசு விழா முன்னெச்சரிக்கை - கோவை நகரில் 1500 போலீசார் குவிப்பு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரம் முமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகரம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடு மற்றும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் அவர் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் கோவை ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

முக்கிய குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், மாநகரம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் வந்து தங்கும் நபர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரிக்குமாறு விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான தகவல்களை பெறாமல் தங்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...