கோவையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 8 வயது சிறுவன் பலி - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ

கோவை போத்தனூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராய்புதீன் (வயது 8) போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.



சிறுவன் ராய்புதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் விளையாடச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சயது முகமது பெரோஸ் என்பவர் தனது காரை திடீரென இயக்கியபோது, சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த சுற்று சுவர் மீது மோதி விழுந்தார்.

அதில், படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பெரோஸ், கார் பின்னால் செல்வதற்கான ரிவர்ஸ் கீரை போடுவதற்கு பதிலாக, தவறி முதல் கியரை போட்டதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சினிமா பாணியில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...