கோவையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 8 வயது சிறுவன் பலி - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ

கோவை போத்தனூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராய்புதீன் (வயது 8) போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.



சிறுவன் ராய்புதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் விளையாடச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சயது முகமது பெரோஸ் என்பவர் தனது காரை திடீரென இயக்கியபோது, சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த சுற்று சுவர் மீது மோதி விழுந்தார்.

அதில், படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பெரோஸ், கார் பின்னால் செல்வதற்கான ரிவர்ஸ் கீரை போடுவதற்கு பதிலாக, தவறி முதல் கியரை போட்டதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சினிமா பாணியில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...