கோவையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 8 வயது சிறுவன் பலி - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ

கோவை போத்தனூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராய்புதீன் (வயது 8) போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.



சிறுவன் ராய்புதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் விளையாடச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சயது முகமது பெரோஸ் என்பவர் தனது காரை திடீரென இயக்கியபோது, சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த சுற்று சுவர் மீது மோதி விழுந்தார்.

அதில், படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பெரோஸ், கார் பின்னால் செல்வதற்கான ரிவர்ஸ் கீரை போடுவதற்கு பதிலாக, தவறி முதல் கியரை போட்டதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சினிமா பாணியில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...