கோவையில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை - வாழைமரங்கள் சேதம்!

கோவை தாளியூர் பகுதியில் விவசாயிகளின் தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டுயானை, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்து சேதப்படுத்திச் சென்ற சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கோவை ஆனைகட்டி மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது தடாகம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஒற்றை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் வேலுசாமி, ரங்கராஜ் என்பவர்களது தோட்டத்திற்குள் நேற்று இரவு ஒன்றை காட்டு யானை புகுந்தது.



அப்போது, அங்கிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்தும், பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...