கோவையில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை - வாழைமரங்கள் சேதம்!

கோவை தாளியூர் பகுதியில் விவசாயிகளின் தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டுயானை, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்து சேதப்படுத்திச் சென்ற சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கோவை ஆனைகட்டி மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது தடாகம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஒற்றை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் வேலுசாமி, ரங்கராஜ் என்பவர்களது தோட்டத்திற்குள் நேற்று இரவு ஒன்றை காட்டு யானை புகுந்தது.



அப்போது, அங்கிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்தும், பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...