பல்லடம் அருகே பொதுமக்களிடம் நூதன மோசடி - முற்றுகையால் பரபரப்பு

பல்லடத்தில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் அருகே தொழிலதிபர் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் சொத்துப்பத்திரங்களை வாங்கி கடன் பெற்று ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்பக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தன்னை தொழில் அதிபர் எனக் கூறிக்கொண்டு பலரிடம் நூதன முறையில் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வங்கியில் அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுக் கொள்வார்.

பின்னர் புதிய தொழில் தொடங்கி முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சொற்ப தொகையைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



இந்நிலையில் கோவை,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் வடுகபாளையத்தை அடுத்த ஸ்ரீ ஸ்ரீ கார்டன் பகுதியில் வசித்து வரும் சிவக்குமாரின் சகோதரர் விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...