பசுமைதேசம் சார்பில் இயற்கையை ஊக்குவிக்கும் மாடித் தோட்ட பயிற்சி


காய்கறிகளுக்காக நமது முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காயகறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது.

காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். அப்படி வாங்கும் காய்கறிகள் ரசாயன உரம் தெளித்து விளைய வைக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை சத்துக்குறைபாடுள்ள, மேலும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.



இதனைக் கருத்தில் கொண்டு ஆறாம் திணை ஆர்கானிக் சந்தை நந்தகோபால், சுவாசம்- செல்வகுமார், இயற்கை அன்னை- நவீன் ஆகியோர் இணைந்து பசுமை தேசம் சார்பில் பெரியநாயக்கன்பாளயத்தில் பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.



இந்நிகழ்வில் தோட்டம் அமைப்பதற்கான சூழலை அறிதல், விதைகளை தேர்வு செய்யவது மற்றும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தொழு மண், மண் புழு உரம், வீட்டுக் கழிவுகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு, நீர் மற்றும் ஆற்றல்களின் சிக்கன பயன்பாடு, பூச்சிகளை அறிதல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, தோட்ட பராமரிப்பு மற்றும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு, அதில் வரும் பால் இல்லாமல் மற்ற மாட்டின் சானம், கோமியம் மதிப்பு கூட்டி விற்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதில், மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 6 விவசாயிகள் உட்பட மொத்தம் 67 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிறைவாக, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...