நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பு பதவிகளுக்கு நேர்க்காணல்

நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நேர்க்காணல் செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவரும் வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன், இணை செயலாளர்கள் வி.பி.ராஜன் திப்பம்பட்டி ஆறுசாமி, கொடநாடு பொன்தோஸ் ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.



அப்போது, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தஃபா, இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...