ஊட்டியின் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான 10 நாள் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது.



நீலகிரி: தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ஒவ்வொரு மாவட்டமாக ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கிய என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைபட கண்காட்சி நடத்தபட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 10 நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்தக் கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்குகளை அவர் பார்வையிட்டார். அதில், வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக வைக்கபட்டுள்ள அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



குறிப்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புகைபடங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.



முன்னதாக, 98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மகளிர் குழுவினருக்கு மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் வழங்கினார். இன்று தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை சிறப்பு திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி கோட்டாச்சியர் துரைசாமி, வட்டாச்சியர் ராஜ்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...