தாராபுரம் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் திரும்பி வந்த நிலையில், விடுதி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ. பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர்.



பொங்கல் விடுமுறை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த விடுதி மாணவிகளுக்கு விடுதி காப்பாளர் பொன்.சுகன்யா ஒருங்கிணைப்பில் இன்று (21/01/2023) பொங்கல் விழா நடைபெற்றது. விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், விடுதியின் தாளாளர் ஹெலன் பிரேம் குமாரி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஜாக்குலின் சமையலர்கள் சந்திரா, சுசீலா, விடுதி காவலர் வேலுச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...