கோவை பேரூர் அருகே தோட்டத்தில் பம்ப் செட்களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை பாசன உபகரணங்கள், சொட்டு நீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.


கோவை: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவுக்காக மலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களில் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இவரது இன்று அதிகாலை புகுந்த 12 யானைகள் கொண்ட யானை கூட்டம் நடராஜன் தோட்டத்திற்குள் புகுந்து 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்த உபகரணங்களை உடைத்தது மட்டுமல்லாமல், அங்கு தக்காளி பயிருக்கு போடப்பட்டு இருந்த சொட்டு நீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது.



அதேபோல், அதன் அருகில் உள்ள நாகர் பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரை ஏக்கர் தீவனப் புற்களை மேய்ந்து விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...