கோவை பேரூர் அருகே தோட்டத்தில் பம்ப் செட்களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை பாசன உபகரணங்கள், சொட்டு நீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.


கோவை: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவுக்காக மலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களில் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இவரது இன்று அதிகாலை புகுந்த 12 யானைகள் கொண்ட யானை கூட்டம் நடராஜன் தோட்டத்திற்குள் புகுந்து 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்த உபகரணங்களை உடைத்தது மட்டுமல்லாமல், அங்கு தக்காளி பயிருக்கு போடப்பட்டு இருந்த சொட்டு நீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது.



அதேபோல், அதன் அருகில் உள்ள நாகர் பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரை ஏக்கர் தீவனப் புற்களை மேய்ந்து விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...