கோவை பேரூர் அருகே தோட்டத்தில் பம்ப் செட்களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை பாசன உபகரணங்கள், சொட்டு நீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.


கோவை: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவுக்காக மலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களில் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இவரது இன்று அதிகாலை புகுந்த 12 யானைகள் கொண்ட யானை கூட்டம் நடராஜன் தோட்டத்திற்குள் புகுந்து 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்த உபகரணங்களை உடைத்தது மட்டுமல்லாமல், அங்கு தக்காளி பயிருக்கு போடப்பட்டு இருந்த சொட்டு நீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது.



அதேபோல், அதன் அருகில் உள்ள நாகர் பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரை ஏக்கர் தீவனப் புற்களை மேய்ந்து விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...