உடுமலை திருப்பதி கோவிலில் பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பு யாகம்!

உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை.


திருப்பூர்: உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.



இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை நடந்தது.



இந்த பூஜையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.



இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர்‌‌ ராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...