உடுமலை திருப்பதி கோவிலில் பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பு யாகம்!

உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை.


திருப்பூர்: உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.



இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை நடந்தது.



இந்த பூஜையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.



இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர்‌‌ ராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...