கோவையில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - அதிரடியாக மீட்ட அதிகாரிகள்!

கோவை தேவராயபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை தேவராயபுரம் ஆக்கிரமிப்பிலிருந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.



மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...