கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை.
கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.