வேங்கைவயல் விவகாரம் - திருப்பூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் அடுத்த இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது.



இதனைக் கண்டிக்கும் வகையிலும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை குவளை முறைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்த சாதிவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழிபாட்டுத் தளங்களுக்குள் செல்லக்கூடிய அருந்ததியின மக்களுக்குத் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரை வளவன்,நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் முருகானந்தம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜான் நாக்ஸ், பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரங்கசாமி, வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் மூர்த்தி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...