வேங்கைவயல் விவகாரம் - திருப்பூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் அடுத்த இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது.



இதனைக் கண்டிக்கும் வகையிலும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை குவளை முறைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்த சாதிவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழிபாட்டுத் தளங்களுக்குள் செல்லக்கூடிய அருந்ததியின மக்களுக்குத் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரை வளவன்,நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் முருகானந்தம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜான் நாக்ஸ், பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரங்கசாமி, வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் மூர்த்தி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...