பஞ்சு விலை கேண்டி ரூ.62 ஆயிரமாக குறைந்தது - இறக்குமதி வரியை நீக்க ஜவுளித் துறையினர் வலியுறுத்தல்

பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.62 ஆயிரமாக குறைந்துள்ளதால், ஏற்றுமதி அதிகரித்து உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்க வேண்டும் என ஜவுளித் தொழில்துறையினர் வலியுறுத்தல்.


கோவை: பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்ற தன்மையால், இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.1 லட்சத்தை கடந்து புதிய வரலாறு படைத்தது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விலை குறைய தொடங்கியது.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் (ஐசிஎப்) தலைவர் துளசிதரன் கூறும்போது, “பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.62 ஆயிரமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் சந்தையில் பஞ்சு வரத்து கணிசமாக அதிகரிக்கும். இதனால் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. விலை குறைந்தால் இந்தியாவில் இருந்து பஞ்சு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் உள்நாட்டு தேவைக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும்” என்றார்.

இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:



கடந்தாண்டு பருத்தி விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,500-க்கு மேல் விலை கிடைத்தது. பெரும்பாலும் விவசாயிகளும், பருத்தி வியாபாரிகளும் 60 சதவீதத்துக்கு குறைவாகவே சந்தைக்கு கொண்டு வந்தனர்.

இந்திய ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க 30 முதல் 60 சதவீதம் வரை உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை கடந்த 10 மாதங்களாக நிலவி வருகிறது.

பஞ்சு ஏற்றுமதி அதிகரித்து உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு நீக்க வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பாதுகாப்பாக உள்ளதால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது.

பன்னாட்டு பருத்தி பஞ்சு வியாபாரிகள் மீண்டும் இந்திய பருத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்து இந்திய ஜவுளித்தொழிலில் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்குவது மட்டுமே 10 மாதங்களாக சரிவை சந்தித்து வரும் ஜவுளித்தொழிலுக்கு நிவாரணமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...