கோவையில் காய்கறி விலை திடீர் சரிவு - காரணம் தெரியுமா?!

கோவையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிவடைந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்துவந்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சலாகும் காய்கறிகள், பூலுவபட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150 க்கு விற்பனையான மொச்சை, இன்று ரூ.20க்கு விற்பனையாகிறது, ரூ.50 ரூபாய்க்கு விற்பனையான மற்ற பயறு வகைகள் ரூ,20 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 90 க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை ஏற்ற இறக்கமின்றி டிப்பருக்கு 500 ரூபாய் என்ற அளவில் இருந்துவருகிறது. தற்போது, பனிக்காலம் என்பதால் வெண்டை வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை இன்னும் ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. மற்ற காய்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.



வரக்கூடிய இரண்டு மாதங்களுக்கு சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளின் விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த சந்தையில் குறைவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையிலும் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், காய்கறிகளின் விலை சரிவு கோவை வாழ் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...