கோவையில் காய்கறி விலை திடீர் சரிவு - காரணம் தெரியுமா?!

கோவையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிவடைந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்துவந்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சலாகும் காய்கறிகள், பூலுவபட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150 க்கு விற்பனையான மொச்சை, இன்று ரூ.20க்கு விற்பனையாகிறது, ரூ.50 ரூபாய்க்கு விற்பனையான மற்ற பயறு வகைகள் ரூ,20 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 90 க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை ஏற்ற இறக்கமின்றி டிப்பருக்கு 500 ரூபாய் என்ற அளவில் இருந்துவருகிறது. தற்போது, பனிக்காலம் என்பதால் வெண்டை வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை இன்னும் ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. மற்ற காய்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.



வரக்கூடிய இரண்டு மாதங்களுக்கு சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளின் விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த சந்தையில் குறைவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையிலும் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், காய்கறிகளின் விலை சரிவு கோவை வாழ் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...